நலம் தரும் பதிகங்கள்

கடன் தொல்லைகளிலிருந்து நீங்கி நிம்மதியாக வாழவும், பிறரிடத்து ஏதும் கடன் பெறாமலே வாழவும் பாராயணம் செய

அ௫ளியவர் :திருஞானசம்பந்தர்

திருமுறை :மூன்றாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

வேத வேள்வியை நிந்தனை செய்துழல்

ஆத மில்லியமணொடு தேரரை

வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே

பாதி மாதுட னாய பரமனே

ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்

ஆல வாயி லுறையுமெம் மாதியே

 

வைதி கத்தின் வழியொழு காதவக்

கைத வம்முடைக் காரமண் தேரரை

எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே

மைதி கழ்தரு மாமணி கண்டனே

ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்

ஆல வாயி லுறையுமெம் மாதியே

 

மறைவ ழக்கமி லாதமா பாவிகள்

பறித லைக்கையர் பாயுடுப் பார்களை

முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே

மறியு லாங்கையின் மாமழு வாளனே

ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்

ஆல வாயி லுறையுமெம் மாதியே

 

அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்

கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடும்

செறுத்து வாதுசெயத்திரு வுள்ளமே

முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே

ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்

ஆல வாயி லுறையுமெம் மாதியே

 

அந்த ணாளர் புரியு மருமறை

சிந்தை செய்யா அருகர் திறங்களைச்

சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே

வெந்த நீற தணியும் விகிர்தனே

ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்

ஆல வாயி லுறையுமெம் மாதியே

 

வேட்டு வேள்விசெ யும்பொரு ளைவிளி

மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை

ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே

காட்டி லானை யுரித்தவெங் கள்வனே

ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்

ஆல வாயி லுறையுமெம் மாதியே

 

அழல தோம்பு மருமறை யோர்திறம்

விழல தென்னு மருகர் திறத்திறம்

கழல வாதுசெ யத்திரு வுள்ளமே

தழலி லங்கு திருவுருச் சைவனே

ஞால நின்புக ழேமிக வேண்டந்தென்

ஆல வாயி லுறையுமெம் மாதியே

 

நீற்று மேனிய ராயினர் மேலுற்ற

காற்றுக் கொள்ளவு நில்லா வமணரைத்

தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே

ஆற்ற வாள ரக்கற்கு மருளினாய்

ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்

ஆல வாயி லுறையுமெம் மாதியே

 

நீல மேனி யமணர் திறத்துநின்

சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே

மாலு நான்முக னுங்காண் பரியதோர்

கோல மேனிய தாகிய குன்றமே

ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்

ஆல வாயி லுறையுமெம் மாதியே

 

அன்று முப்புரஞ் செற்ற வழகநின்

துன்று பொற்கழல் பேணா வருகரைத்

தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே

கன்று சாக்கியர் காணாத் தலைவனே

ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்

ஆல வாயி லுறையுமெம் மாதியே

 

கூட லாலவாய்க் கோனை விடைகொண்டு

வாடன் மேனி யமணரை வாட்டிட

மாடக் காழிச்சம் பந்தன் மதித்தவிப்

பாடல் வல்லவர் பாக்கிய வாளரே

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

நக்கீரருக்கு இலக்கணம் உபதேசித்தல்
View Details
கண தங்கணான் சித்தர்
View Details
கருவூரார்
View Details