அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
புரம் மூன்றும் செற்றானைப்
பூணாகம் அணிந்தானை
உரனில் வரும் ஒரு பொருளை
உலகு அனைத்தும் ஆனானைக்
கரணங்கள் காணாமல் கண்
ஆர்ந்து நிறைந்தானைப்
பரமனையே பாடுவார் தம்
பெருமை பாடுவாம். 1
தென் தமிழும் வட கலையும்
தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம் புரியும்
வள்ளலையே பொருள் ஆக
ஒன்றிய மெய்யுணர் வோடும்
உள் உருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப்
பரமனையே பாடுவார். 2
திருச்சிற்றம்பலம்