பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

067 திருவாரூர்ப் பிறந்தார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அருவாகி உருவாகி அனைத்துமாய் 

  நின்ற பிரான்

மருவாருங் குழல் உமையாள் 

  மணவாளன் மகிழ்ந்து அருளும்

திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத் 

  தொண்டு தெரிந்து உணர

ஒரு வாயால் சிறியேனால் 

  உரைக்கலாம் தகைமையதோ.  1 

 

 

திருக் கயிலை வீற்றிருந்த சிவபெருமான் 

  திருக் கணத்தார்

பெருக்கிய சீர்த் திருவாரூர்ப் 

  பிறந்தார்கள் ஆதலினால்

தருக்கிய ஐம் பொறி அடக்கி 

  மற்றவர்தந் தாள் வணங்கி

ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து 

  ஆகும் உயர் நெறியே.  2 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

நேச நாயனார்
View Details
சிறப்புலி நாயனார்
View Details
சமணர் ஏவிய சர்ப்பம் துணித்தல்
View Details