பத்தாம்-திருமுறை

3ம் தந்திரம் - 13. காயசித்தி உபாயம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே  1 

 

 

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று

உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே  2 

 

 

சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியுங்

கழற்றி மலத்தைக் கமலத்துப் பூரித்து

உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு

அழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே  3 

 

 

அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில்

வஞ்சக வாத மறுமத்தி யானத்திற்

செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும்

நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே  4 

 

 

மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள

வேன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம்

நான்றவிம் முட்டை யிரண்டையுங் கட்டியிட்டு

ஊன்றி யிருக்க உடம்பழி யாதே  5 

 

 

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர

நூறும் அறுபதும் ஆறும் இடம்வர

நூறும் அறுபதும் ஆறும் எதிரிட

நூறும் அறுபது மாறும் புகுவரே  6 

 

 

சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான்

மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாந்

தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படுஞ்

சத்தியஞ் சொன்னோஞ் சதாநந்தி ஆணையே  7 

 

 

திறத்திறம் விந்து திகழு மகார

முறப்பெற வேநினைந் தோதுஞ் சகார

மறிப்பது மந்திர மன்னிய நாத

மறப்பெற யோகிக் கறநெறி யாமே  8 

 

 

உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்

சிந்தித் தெழுப்பிச் சிவமந்திரத்தினால்

முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்

சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே 9 

 

 

மாறா மலக்குதந் தன்மே லிருவிரற்

கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்

ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்

கூறா உபதேசங் கொண்டது காணுமே  10 

 

 

நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்

சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு

ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்

பாலனு மாவர் பராநந்தி ஆணையே  11 

 

 

அண்டஞ்சுருங்கில் அதற்கோ ரழிவில்லை

பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்

உண்டி சுருங்கில் உபாயம் பலவுள

கண்டங் கறுத்த கபாலியு மாமே  12 

 

 

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை

அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில்

வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார்

கண்டிச் சிக்குநற் காயமு மாமே  13 

 

 

சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி

அழலும் இரத்தத்துள் அங்கியுள் ஈசன்

கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே

நிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே  14 

 

 

நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்

தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்

ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாக

மான்கன்று நின்று வளர்க்கின்ற வாறே 15 

 

 

ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற

1நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்

பாகு படுத்திப் பல்கோடி களத்தினால்

ஊழ்கொண்ட மந்திரத் தன்னால் ஒடுங்கே 16

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

கரிக்குருவிக்கு உபதேசம் செய்தல்
View Details
சப்தகந்தலிங்க சித்தர்
View Details
சுந்தரநாதனுக்கு பொற்கிழி கிடைக்கச் செய்தல்
View Details