சிவஞான போதம்

முதல் நூற்பா

“அவன் அவள் அதுஎனும் அவை மூ வினைமையின்

தோற்றிய திதியே ஒடுங்கிமலத்து உளதாம்

அந்தம் ஆதி என்மனார் புலவர்”


இரண்டாம் நூற்பா

“அவையே தானே யாய், இது வினையின்

போக்கு வரவு புரிய ஆணையின்

நீக்க மின்றி நிற்கும் அன்றே”


மூன்றாம் நூற்பா

‘உளது இலது என்றலின் எனதுடல் என்றலின்

ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படில்

உண்டி வினை இன்மையின் உணர்ந்த வுணர்தலின்

மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா’


நான்காம் நூற்பா

'அந்தக் கரணம் அவற்றின் ஒன் றன்று; அவை

சந்தித்தது ஆன்மா சகச மலத்து உணராது

அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்தே'


ஐந்தாம் நூற்பா

'விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு

அளந்தறிந்து அறியா ஆங்கவை போலத்

தாமதம் உணர்வின் தமியருள்

காந்தங் கண்ட பசாசத்து அவையே’


ஆறாம் நூற்பா

‘உணர்உரு அசத்துஎனின் உணராது இன்மையின்

இருதிறன் அல்லது சிவசத் தாம்என

இரண்டு வகையின் இசைக்கும் மன் னுலகே’


ஏழாம் நூற்பா

‘யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின்

சத்தே அறியாது அசத்துஇலது அறியாது

இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா’


எட்டாம் நூற்பா

‘ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்துஎனத்

தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த, விட்டு

அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே’


ஒன்பதாம் நூற்பா

'ஊனக் கண் பாசம் உணராப் பதியை

ஞானக் கண்ணினில் சிந்தை நாடி;

உராத்துனைத் தேர்த்துஎனப் பாசம் ஒருவத்

தண்ணிழலாம்பதி, விதி எண்ணும் அஞ் செழுத்தே’


பத்தாம் நூற்பா

‘அவனே தானே யாகிய அந்நெறி

ஏக னாகி இறைபணி நிற்க

மலம்மாயைதன்னொடு வல்வினை இன்றே’


பதினோராம் நூற்பா

‘காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்

காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்

அயரா அன்பின் அரன்கழல் செலுமே’


பன்னிரண்டாம் நூற்பா

'செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா

அம் மலம் கழீஇ அன்பரொடு மரீஇ

மாலற நேயம் மலிந்தவர் வேடமும்

ஆலயந் தானும் அரன்எனத் தொழுமே’